×

பெண்ணிடம் நகை பறிப்பு

பரமக்குடி, ஜூன் 21: பரமக்குடி அருகே கரைமேல் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (50). நேற்று பஸ் நிறுத்தத்தில் பரமக்குடி செல்வதற்காக நின்றிருந்தார். அப்போது காரில் வந்த 3 இளைஞர்கள் காரில் இருந்தபடியே அவரிடம் பரமக்குடி செல்வதற்கு வழி கேட்டுள்ளனர்.  ராஜேஸ்வரி அவர்களிடம் வழி கூறியபோது திடீரென ஒரு இளைஞர் அவரது கழுத்தில் இருந்த 3 சவரன் தாலிச் செயினை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி சத்தம் போட்டவுடன் அவர்கள் காரில் தப்பி சென்றனர். புகாரின் பேரில் நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகல் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை