×

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

மதுரை, ஜூன் 20: குடிநீர் வழங்காததை கண்டித்து காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட கண்ணனேந்தல் பகுதிக்கு குடிநீர் சரிவர வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்பட பொதுமக்கள் மூன்றுமாவடி-ஐயர்பங்களா பிரதான சாலையில் உள்ள கண்ணனேந்தல் பிரிவிற்கு காலிக்குடங்களுடன் வந்தனர். அங்கு சாலையை மறித்து அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். மாநகராட்சி அதிகாரிகளும் அங்கு சென்றனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் சரியாக வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், தற்காலிகமாக லாரிகளில் குடிநீர் சப்ளை செய்வதாகவும் அவர்கள் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags :
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...