×

கலெக்டர் அலுவலக லிப்டில் 6 பேர் சிக்கினர் வேலூரில் பரபரப்பு

வேலூர், ஜூன் 20:வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் லிப்டில் 6 பேர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஏ பிளாக், பி பிளாக் என இரு பிளாக்குகள் உள்ளன. பி பிளாக்கில் கருவூலம், முதன்மை கல்வி அலுவலகம், ஊராட்சிகள் உதவி இயக்குனர் அலுவலகம், சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன. நேற்று காலை வழக்கம்போல் அலுவலகங்கள் இயங்கின.

மதியம் 12.30 மணியவில் பி பிளாக்கில் உள்ள முதல் லிப்டில் அரசு ஊழியர்கள் உட்பட 6 பேர் 5வது மாடியில் இருந்து கீழ் பகுதிக்கு வந்தனர். நடுவழியில் லிப்ட் திடீரென பழுதானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டெலிபோன் எக்சேஞ்ஜ் அறை மற்றும் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதற்கிடையில் அங்கிருந்த சில ஊழியர்கள் கூச்சல் சத்தம் கேட்டு லிப்ட் கதவை கைகளால் திறக்க முயற்சி மேற்கொண்டனர். 15 நிமிட போராட்டத்துக்கு பிறகு கதவு திறந்தது. இதையடுத்து உடனடியாக அதில் இருந்தவர்கள் வெளியேறினர். 6 பேர் லிப்ட்டில் சிக்கிய சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED குடும்ப பிரச்னையால் பெண்...