அரியலூர்,ஜூன் 20 : அரியலூர் ஒன்றியம் இடையத்தான்குடி ஊ.ஒ.ந.நி.பள்ளியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு நேற்று மாணவர்களுக்கு யோகா மற்றும் தியான பயிற்சி அளிக்கப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் ஹேமலதா தலைமையேற்று வரவேற்புரையாற்றினார்.பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவி சிங்காரவள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இளவரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.உலக யோகாதினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு குமாரசாமி மற்றும் செல்வன் சக்திமுருகன் ஆகியோர் யோகா பயிற்சி அளித்தனர். பின்னர் அனுசுயா மற்றும் கெஜலட்சுமி ஆகியோர் தியான பயிற்சி அளித்தனர்.
விழாவில் பள்ளிஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்,ஊர் முக்கியஸ்தர்கள, பெற்றோர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். பள்ளியின் கணிதபட்டதாரி ஆசிரியர் முருகானந்தம் நன்றி கூறினார்.