×

அரியலூர் அருகே மது விற்ற பெண் கைது

அரியலூர், ஜூன் 20:  அரியலூர் அருகே மது விற்பனை செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.அரியலூர் அருகே விக்கிரமங்கலம் போலீஸ் எஸ்ஐ கனகவள்ளி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோரைக்குழி வடக்கு தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி அம்பிகா(40) அவரது வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.  இதையடுத்து போலீசார் வழக்கு பதிந்து அம்பிகாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.பொதுமக்களுக்கு இடையூறு செய்தவர் கைதுஅம்பலவர்கட்டளை விக்கிரமங்கலம்- அரியலூர் சாலையில் நேற்று ஒருவர் மதுபோதையில் நின்று கொண்டிருந்த ஒருவர் தகாத வார்த்தைகளை பேசியதுடன், பொதுமக்களுக்கு இடையூறு செய்துகொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விக்கிரமங்கலம் போலீஸ் எஸ்ஐ கனகவள்ளி மற்றும் போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அம்பலவர்கட்டளையை சேர்ந்த காதர்பாட்சா மகன் சேக்அலாவுதீன்(48) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சேக்அலாவுதீனை கைது செய்தனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...