×

அரியலூரில் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் நிர்வாகிகள் கேக் வெட்டினர்

அரியலூர், ஜூன் 20: அரியலூரில் காங்கிரஸ் தேசிய தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழாவினை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.
அரியலூரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் காமராஜர் சிலை முன்பாக கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவிற்கு நகர காங்கிரஸ் தலைவர் சந்திரசேகர் தலைமை தாங்கினார். முன்னிலை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். இதையடுத்து கட்சியினர் கேக் வெட்டினர். பின்னர் பொதுமக்களுக்கு கேக்  மற்றும் சர்க்கரை பொங்கல் வழங்–்கினர். இந்த நிகழ்ச்சியில் நகர துணை தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொது செயலாளர் அமானுல்லா, சேவாதளம் சிவா. விவசாய பிரிவு பழனிமுத்து, ஐஎன்டியூசி நிர்வாகி ராஜா, இளைஞரணி நிர்வாகி பாலகிருஸஷ்ணன், நகர பிரதிநிதிகள் கலியன், ரகுபதி ராஜேந்திரன், தெய்வகுமார், குலேந்திரன், ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர துணை தலைவர் முருகேசன் நன்றி கூறினார்.

அரியலூர் மற்றும் தேளுர் துணை மின் நிலைய பகுதிகள்: அரியலூர் ஒரு சில பகுதி, கயர்லாபாத், வாலாஜாநகரம், கல்லங்குறிச்சி, காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், வாரணவாசி, அஸ்தினாபுரம், கொளப்பாடி, ராஜீவ்நகர், மணக்குடி, குறிச்சி நத்தம், புதுப்பாளையம், சிறுவளுர், ஜெமீன் ஆத்தூர், ரசுலாபாத், பாளம்பாடி, பார்ப்பனச்சேரி, தவுத்தாய்குளம், மல்லூர், கடுகூர், கோப்பிலியன்குடிக்காடு, தாமரைக்குளம், பொய்யாதநல்லூர், கோவிந்தபுரம், ஓ.கூத்தூர், ஒட்டக்கோவில், சீனிவாசபுரம், கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மண்ணுழி, வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி, தேளுர், நாகமங்கலம், நெரிஞ்சிக்கோரை, வெளிப்பிரிங்கியம், நாயக்கர்பாளையம், பெரியதிருக்கோணம், செட்டித்திருக்கோணம், விக்கிரமங்கலம், முனியங்குறிச்சி, நாச்சியார்பேட்டை, ஆச்சனூர்.

Tags :
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்