×

திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாகூர் ஆண்டவர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழம், பிரட் வழங்கல்

நாகை,ஜூன் 20: திமுக தலைவர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி நாகூர் ஆண்டவர் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழம், பிரட் வழங்கப்பட்டது.
நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில், திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாகூர் நகர தி.மு.க. சார்பில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு நகர செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கவுதமன் நோயாளிகளுக்கு பிரட், பழம், பிஸ்கெட், தண்ணீர் பாட்டில், பால், ஜூஸ் ஆகியவற்றை வழங்கினார். விழாவில், மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் மாரிமுத்து, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை துணை அமைப்பாளர் தங்கதுரை, நகர அவைத்தலைவர் அகமது உசேன், மாவட்ட பிரதிநிதி கரிகாலன், முன்னாள் கவுன்சிலர்கள் நடராஜன், ஆல்பர்ட், நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மதன்ராஜ், சர்புதீன், நகர கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் நூர்அமீன், வட்ட பிரதிநிதிகள் அப்துல் ரகீம், செல்லதுரை, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை துணை அமைப்பாளர் ஷேக் முகமது ஹாஜி, விவசாய தொழிலாளர் அணி நகர அமைப்பாளர் அமீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...