×

பேராவூரணியில் திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாள் கொண்டாட்டம்

பேராவூரணி, ஜூன் 20: திமுக தலைவர் கருணாநிதி பிறந்த நாளையொட்டி பேராவூரணியில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து பல்வேறு இடங்களில் கட்சி கொடியை திமுகவினர் ஏற்றினர். ஒன்றிய பொறுப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சண்.ராமநாதன் பங்கேற்று பல்வேறு இடங்களில் கொடியேற்றி வைத்தார்.

நகர செயலாளர் நீலகண்டன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ், மீனவரணி அமைப்பாளர் ஜெயப்பிரகாஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுப.சேகர், இளைஞரணி நிர்வாகிகள் ஆரோ.அருள், நெசவாளரணி வேலுச்சாமி, அச்சகம் நீலகண்டன், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் அரசு, பாரூக், தலைமை கழக பேச்சாளர் அப்துல் மஜீத் பங்கேற்றனர்.இதைதொடர்ந்து திமுக இளைஞரணி சார்பில் சித்துக்காடு அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு ரூ.50,000 மதிப்பிலான நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது.

Tags :
× RELATED ஒரத்தநாடு அருகே ஓய்வுபெற்ற எஸ்ஐ...