×

குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சேர்க்கை விண்ணப்பம் விநியோகம்

தஞ்சை, ஜூன் 20: தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் 2018-19ம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு முதுகலை மற்றும் முதுஅறிவியல் பாடப்பிரிவில் மாணவிகள் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் நேற்று துவங்கியது. விண்ணப்பத்தை கல்லூரி முதல்வர் திருவள்ளுவர் வழங்கினார். வரும் ஜூலை 2ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகிக்கப்படவுள்ளது. ஓசி, பிசி, எம்பிசி பிரிவினருக்கு ரூ.60, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இலவசமாகவும் விண்ணப்பங்கள் வழங்கப்படும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் சாதி சான்றிதழின் நகல் வழங்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை 2ம் தேதிக்குள் அளிக்க வேண்டும். இவ்வாறு கல்லூரி முதல்வர் திருவள்ளுவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா