×

மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி திருமங்கலம் அணி வெற்றி

திருமங்கலம், ஜூன் 19: திருமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், நண்பர்கள் கால்பந்தாட்ட குழுவினர் சார்பில், மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஐந்து வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்ற விதிமுறைகளுடன் நடந்தது. விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, நாகை, சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். அரையுறுதியில் வென்ற தென்மண்டல காவலர் அணியுடன், திருமங்கலம் விக்னேஸ் மெமோரியல் அணியும் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த போட்டியில் 4க்கு 1 என்ற கோல் கணக்கில் திருமங்கலம் அணி வெற்றி பெற்றி பெற்று சூழல் கோப்பையை கைப்பற்றியது. திமுக முன்னாள் நகரசெயலாளர் ஸ்ரீதர் வெற்றி பெற்ற அணிக்கு ரூ.20 ஆயிரமும், கோப்பையைும் வழங்கினார். இரண்டாம் இடம் பெற்ற தென்மண்டல காவலர் அணிக்கு ரன்னர் கோப்பையுடன், ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை சங்க செயலாளர்கள் சவுந்தரபாண்டி, கணபதி ஆகியோர் செய்திருந்தனர்.


Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை