×

நகை பறித்த மூவர் கைது

திருமங்கலம், ஜூன் 19: மதுரை பெத்தானியபுரத்தை சேர்ந்த முத்து (45), திருமங்கலம் அருகே, ஆலம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு மனைவி முருகேஸ்வரியுடன் தனது நிறுவனத்திற்கு வந்துவிட்டு ஆலம்பட்டியில் பஸ் ஏறுவதற்காக நடந்து சென்றார். அப்போது அவர்களை வழிமறித்த மூன்று வாலிபர்கள், முருகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித்து ஓடினர். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசில் முத்து புகார் செய்தார். எஸ்ஐ பாண்டியராஜன் தலைமையில், போலீசார் நகை திருடர்களை தேடிவந்தனர். இந்தநிலையில் ரிங்ரோடு அருகே, எஸ்.புளியங்குளம் டாஸ்மாக் கடையில் இருந்து வந்த மூன்று வாலிபர்களை நிறுத்தி சோதனையிட்டனர். அவர்கள் முருகேஸ்வரியிடம் நகை பறித்ததை ஒப்புக்கொண்டனர். விசாரணையில், ‘ஐராவதநல்லுாரைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ் (18), தெப்பக்குளம் சதீஷ்ராஜ் (23), சக்கிமங்கலம் அருண்பாண்டியன் (25) என தெரிய வந்தது. இவர்கள் ஏற்கனவே பல்வேறு நகைப் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த தாலுகா போலீசார் அவர்களிடமிருந்து 12 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED போலீஸ் கொடி அணிவகுப்பு