×

ஆற்றில் மூழ்கி மூதாட்டி பரிதாப சாவு

சிதம்பரம், ஜூன் 18: கொள்ளிடம் ஆற்றில் இறால் பிடிக்க சென்ற மூதாட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் அருகே தொடுவாய் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மனைவி பாப்பா (64). இவர் கடந்த 15ம் தேதி கொள்ளிடம் ஆற்றில் இறால் பிடிக்க சென்றுள்ளார். ஆற்றில் இறங்கி இறால் பிடித்துக் கொண்டிருந்த போது ஆற்றின் நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவரது சடலம், கொள்ளிடம் ஆற்றின் வடபுறம் கரை ஒதுங்கியது.

இதுகுறித்து பாப்பாவின் மகன் அஞ்சப்பன் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து சடலத்தை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது