×

கார் மீது லாரி மோதி தம்பதி படுகாயம்

அரியலூர், ஜூன் 16: ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் சுந்தரேசன் (70). இவரது மனைவி ஜெயலட்சுமி (58). இருவரும் தஞ்சாவூருக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பினர். அப்போது இந்த கார் மீது எதிரே வந்த லாரி ேமாதியது. இதில் படுகாயமடைந்த சுந்தரேசன், ஜெயலட்சுமி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கயர்லாபாத் போலீசார் வழக்குப்பதிந்து லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED தத்தனூர் கீழவெளியில் பெயர் இல்லை...