×

மரத்தின் மீது பைக் மோதி விவசாயி பலி

பாடாலூர், ஜூன் 16: ஆலத்தூர் தாலுகா குரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(48), விவசாயி. இவர் நேற்று பைக்கில் குரூரில் இருந்து புறப்பட்டு கொளக்காநத்தம் நோக்கி சென்றார். அப்போது நாட்டார் மங்கலம் - ஆலத்தூர் கேட்இடையே ஒரு வளைவில் நிலை தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்