×

ஆட்டோ மோதி பெண் பலி

ஜெயங்கொண்டம், ஜூன் 16: ஜெயங்கொண்டம் அருகே உள்ள குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி இந்திராணி (52). இவர் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு செல்வதற்காக கூவத்தூர் பஸ்ஸ்டாண்டில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது நெட்டலகுறிச்சியில் இருந்து  ஆண்டிமடம் நோக்கி சென்ற ஆட்டோ, இந்திராணி மீது மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இந்திராணி பலியானார். ஆண்டிமடம் சப்இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இந்திராணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிந்து ஆட்டோ டிரைவரான நெட்டலகுறிச்சியை சேர்ந்த ஆரோக்கியபவுல்ராஜ் (26) என்பவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...