×

அரியலூர் திருமழப்பாடியில் இயந்திரம் மூலம் நெல் நடவு பணி தொடக்கம்

அரியலூர், ஜூன்,16: அரியலூர் திருமழப்பாடியில் இயந்திர நெல் நடவு பணிகள் துவங்கியது. இதனை கலெக்டர் விஜயலட்சுமி பார்வையிட்டார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், திருமழப்பாடி கிராமத்தில் வேளாண்மைத்துறைய சார்பில் இயந்திர நெல் நடவு பணிகள் துவங்கியது. இதனை பார்வையிட்ட கலெக்டர்  விஜயலட்சுமி கூறியதாவது:
தமிழகத்தில் நெல் சாகுபடியில் நடவு செலவை குறைப்பதற்கும், ஆட்கள் பற்றாக்குறையை போக்குவதற்கும் தற்போது இயந்திரங்கள் தற்பொழுது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் டெல்டா பகுதிகளான திருமானூர், தா.பழூர் மற்றும் ஜெயங்கொண்டம் வட்டாரங்களில் ஆண்டுதோறும் சராசரியாக 1500 ஹெக்டேர் அளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதனை ஊக்கப்படுத்தும் வகையில் குறுவை தொகுப்பு திட்டத்தின்கீழ் கடந்த ஆண்டில் தமிழக அரசின் சார்பில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நடவு இயந்திரங்களை பயன்படுத்த ஏக்கருக்கு ரூ.4000 என்று 179 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது. நடப்பாண்டும் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளன. இதில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி திருமழப்பாடியில் இயந்திர நெல் நடவு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, வேளாண் இணை இயக்குநர் உதயகுமார், வேளாண் பொறியியல் செயற்பொறியாளர் நாகநாதன், உதவி இயக்குநர் கண்ணன், வேளாண் அலுவலர் சாந்தி மற்றும் அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED பெரம்பலூர் /அரியலூர் கொள்ளை நோய் பரவலை...