×

மணியரசன் தாக்கப்பட்டதை கண்டித்து திருமானூரில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஜூன் 13:  தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் மர்மநபர்களால் தாக்கப்பட்டதை கண்டிப்பது, தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையம் அருகே கொள்ளிடம் நீராதார பாதுகாப்பு குழு மற்றும் விவசாய சங்கங்கள், அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் மணியன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட மகளிரணி தலைவி மாரியம்மாள், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சவுரிராஜன், அமமுக ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.முன்னாள் கவுன்சிலர் சக்திவேல், திமுக ஊராட்சி செயலாளர் சுந்தர சக்திவேல், அமமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் மூக்கையாபாண்டியன், நாம் தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது