×

கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 லாரி பொக்லைன் பறிமுதல்

அரியலூர்,  ஜூன் 13: கொள்ளிடம் ஆற்றில் மணல் கடத்திய 2 லாரி, பொக்லைன் இயந்திரம்  பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.அரியலூர்  மாவட்டம் திருமானூர் அருகே உள்ள செம்பியக்குடி பகுதியில் வெங்கனூர்  சப்இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது செம்பியகுடி சுடுகாட்டு பாதையில்  லாரிகளில் பொக்லைன் உதவியுடன் மணல் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது.  இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மணல் அள்ள பயன்படுத்திய  பொக்லைன் இயந்திரம் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.மேலும் லாரி  டிரைவர்களான பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையம் குமார் (30), கோனேரிபானையம்  சின்னதம்பி (22) ஆகியோரை கைது செய்தனர்.

Tags :
× RELATED பயிர் சாகுபடிக்கு முன் மண் பரிசோதனை அவசியம் வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்