×

கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை குற்றம் புரிந்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:  திருவான்மியூரில்  கலாஷேத்ரா அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கல்லூரியில் மாணவிகளுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மாணவிகள் பாலியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து கல்லூரி வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே தமிழக அரசு, இதுதொடர்பாக விசாரணையை மேற்கொண்டு குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஒரு காலக்கெடுவிற்குள் கண்டறிந்து, பணிநீக்கம் செய்யவும், தண்டனை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள், கல்வி வளாகத்திற்குள் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள வேண்டும். தமிழக அரசு, கலாஷேத்ரா கல்லூரி மாணவிகள் தெரிவித்திருக்கும் புகாருக்கு உரிய நியாயம் கிடைக்கவும், இனி இதுபோன்ற நடைபெறாமல் இருக்கவும் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

Tags : Kalashetra ,GK Vasan , Kalashetra sexual harassment offenders should be punished: GK Vasan insists
× RELATED தேர்தல் விதிமீறலில் ஈடுபட்டதாக ஈரோடு...