தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே நேற்று காலை ஒரு முதியவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு இருப்பதை பார்த்து, அந்த வழியாகச் சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஆர்.கே.நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர், தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகில், நடைபாதையில் தனியாக வசித்து வந்த ராமு (61) என்பது தெரியவந்தது.