×

தன்னுடைய அறிவாற்றலால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறார் முதல்வர்: திருத்தணி திமுக எம்எல்ஏ சந்திரன் பாராட்டு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிவாற்றலால் மக்களுக்கு நல்ல திட்டங்களை கொடுத்து வருகிறார் என்று திருத்தணி தொகுதி திமுக எம்எல்ஏ சந்திரன் பாராட்டினார். சட்டப்பேரவையில் நேற்று பள்ளி கல்வி துறை, உயர் கல்வி துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் திருத்தணி எஸ்.சந்திரன் (திமுக) பேசியதாவது: இந்த நிதிநிலை அறிக்கை மற்றும் தமிழகத்தில் தீட்டப்படும் திட்டங்களினால், இந்தியாவின் எல்லா மாநிலங்களும் இன்று தமிழகத்தை உற்று நோக்குகின்றன. ‘சட்டியிலே இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பார்கள்.  காலி சட்டியை ஒப்படைத்துச் சென்றார்கள்.  

தன்னுடைய அறிவாற்றலால், அனுபவத்தால், சட்டியை நிரப்பி, மக்களுக்கு திட்டங்களை கொடுத்திருக்கும் நமது திராவிட மாடல் முதல்வர். ஆளுநர் மாளிகையிலே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று முழங்கியபோது, ஆளுநர் மாளிகை மட்டுமா அதிர்ந்தது.  டெல்லி செங்கோட்டையில் பூகம்பமே உருவானது. கரகாட்ட கோஷ்டிகள் எல்லாம் காலாவதியாகிவிட்டன். எதிர்க்கட்சி நண்பர்கள், நீங்கள் எதிர் வரிசையில் இருப்பதால், உணர்வுகளை உங்களால் வெளிப்படுத்த இயலவில்லை.  நீங்கள் இங்கு இருந்தால், நீங்களும் இருக்கைகளை தட்டி முதல்வரை பாராட்டி இருப்பீர்கள். முதல்வரின் சாதனைகளை எண்ணி, நீங்கள் முதல்வரை நோக்கி உங்கள் இதயங்களை தட்டுவது எங்களின் காதுகளுக்கு ரகசியமாக கேட்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Tags : Chief Minister ,DMK ,MLA ,Chandran , Chief Minister is giving good schemes to the people with his knowledge: Appreciate DMK MLA Chandran
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...