×

கல்லூரிக்கு சென்ற மகள் மாயம்: போலீசில் தந்தை புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் கீழச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (48). இவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். இவர்களில் கடைசி மகள் அன்னபூரணி(18), கீழச்சேரியில் உள்ள கிரைஸ்ட் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த 29ம் தேதி கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற அன்னபூரணி, மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர், மகளின் தோழிகளிடமும், கல்லூரி நிர்வாகத்திடம் விசாரித்தார். எந்த தகவலும் கிடைக்காததால் மப்பேடு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Tags : Magyam , Daughter who went to college mayam: Father complains to police
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...