×

மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகள், பார்களை மூடவேண்டும்: கலெக்டர் ஆர்த்தி உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, வரும் 4ம்தேதி முழுவதும் மதுபான கடைகள் மற்றும் பார்கள் அனைத்தையும் மூடப்பட வேண்டும் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 4ம்தேதி மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபானம் (உரிமம் மற்றும் அனுமதி) விதிகள் 1989, விதி 23 மற்றும் உரிம நிபந்தனைகளின்படி, அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்களை, நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.எனவே, மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, 4ம்தேதி (செவ்வாய் கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) ஆகியவற்றை நாள் முழுவதுமாக மூடப்பட வேண்டும்.  இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Mahavir Jayanti ,Aarti , Liquor shops, bars to be closed on Mahavir Jayanti: Collector Aarti orders
× RELATED போலீசிடம் தகராறு வாலிபர் மீது வழக்கு