காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் மடம் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரின் மனைவி காமாட்சி (42). கடந்த மார்ச் 29ம்தேதி, காமாட்சியின் கணவர் செல்வம் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரின் இறுதி சடங்குகள் நடந்து முடிந்த நிலையில், காமாட்சி யாரிடமும் பேசாமல் சோகத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் வெளியில் கிளம்பியவர் பிள்ளையார் பாளையத்தில் உள்ள குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் இறந்த 2 நாளில் மனைவி குளத்தில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.