×

மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மோட்டார் வாகன ஆய்வாளர் பணியிடத்திற்கான இறுதி முடிவுகள் நீதிமன்ற இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வு எழுதிய சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர், இரண்டாம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் தேர்வில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்தக்கட்டமாக நடைபெறும் நேர்முகத்தேர்வுக்கு அனுமதிக்கவில்லை. எனவே, தங்களை அனுமதிக்கக் கோரி ஐகோர்ட் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனுதாரர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்க  உத்தரவிட்டார். மேலும் மனுதாரர்களது நேர்முகத்தேர்வு முடிவுகளை, சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும்1ம் தேதி வரை பிற விண்ணப்பதாரர்களின் நேர்முகத்தேர்வு முடிவுகளை ஒத்தி வைக்கவும்  உத்தரவிட்டார். தொடர்ந்து தேர்வு முடிவுகள் நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது என குறிப்பிட்டு, வழக்கை ஏப்.11ம் தேதிக்கு  ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Final decisions for the post of Motor Vehicle Inspector are subject to court final order: iCourt Branch Order
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...