காரைக்கால்: காரைக்காலில் பத்திரப்பதிவு உதவி பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவு, பத்திர நகல், சொத்து ஆய்வு, வில்லங்க சான்று உள்ளிட்ட பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாகவும், விடுமுறை நாட்களிலும் திறந்தி வைத்திருப்பதாகவும்லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திற்கும், புதுச்சேரி அரசு தலைமை செயலாளருக்கும், சிபிஐக்கும் புகார் சென்றது. இந்நிலையில் நேற்று சென்னையிலிருந்து சிபிஐ டிஎஸ்பிக்கள் வெங்கடேஷ், சேதுமாதவன், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 13 பேர் அடங்கிய குழுவினர் மூன்று கார்களில் காரைக்கால் சென்றனர். மதியம் 3 மணியளவில் உதவி பதிவாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தி பணியிலிருந்த உதவி பதிவாளர் சந்திரமோகன், அலுவலக ஊழியர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். உதவிப்பதிவாளர் சந்திரமோகன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல கோடி மதிப்புள்ள ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.