×

ஆசிட் தொட்டியில் இறங்கியவரின் 2 கால்கள் கருகின

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே உள்ள அக்ராவரம் மலைமேடு எம்ஜிஆர் நகர் மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் குமார் (52). இவர் நேற்று முன்தினம் மாலை கம்பெனிக்கு தேவைப்படும் பைப்புகள் உள்ளிட்ட உற்பத்தி பொருட்கள் வாங்குவதற்கு சிப்காட் பேஸ்-3ல் உள்ள மெட்டல் கம்பெனிக்கு சென்றார். அங்கு பைப்புகளை டிராக்டரில் ஏற்றிவிட்டு தண்ணீர் குடிப்பதற்காக சென்றவர், அங்குள்ள நீர்த்த ஆசிட் தொட்டியில் இறங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவரது இரண்டு கால்களில் முழங்கால் வரை கருகியது.


Tags : 2 legs of the person who landed in the acid tank were burnt
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...