×

குண்டும், குழியுமான ஏமூர்- சீத்தப்பட்டி சாலை சீரமைக்க கோரிக்கை

கரூர், மே26:  ஏமூர்- சீத்தப்பட்டி சாலையை சீரமைத்து தர வேண்டும என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் திருச்சி பைபாஸ் சாலையின் இருபுறமும் ஏமூர், ஏமூர் புதூர் கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியின் வழியாக மேம்பாலத்தின் கீழ்ப்புறம் உள்ள குகைவழிப்பாதையின் வழியாக சீத்தப்பட்டி, வெள்ளியணை போன்ற பகுதிகளுக்கு செல்வதற்கு சாலை வசதி உள்ளது. கரூரில் இருந்து நகரப் பேரூந்துகளும், மினி பஸ்களும் இந்த சாலையின் வழியாக சென்று வருகிறது.

மேலும், நூற்றுக்கணக்கான கிராம மக்களும் இந்த சாலையின் வழியாக திருச்சி பைபாஸ் சாலை, வெள்ளியணை, கரூர் போன்ற பகுதிகளுக்கு இரண்டு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இந்நிலையில், கிராமங்கள் அதிகளவு சூழ்ந்துள்ள இந்த சாலை குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என இந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பிளாஸ்டிக் பையால் ஏற்படும் மாசு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு