×

நடத்தை விதிகள் அமல் கர்நாடக முதல்வரின் காரை நிறுத்தி சோதனை

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வரும் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து தேர்தல் அதிகாரிகள், மாநிலம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைத்து பறக்கும் படை மூலமாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்று விட்டு, பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்று கொண்டிருந்த முதல்வர் பசவராஜ் பொம்மையின் காரை கோஷாயுதா சோதனைச் சாவடியில் இருந்த அதிகாரிகள் மறித்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் உள்ளனவா என சோதனையிட்டனர்.



Tags : Amal ,Karnataka , Karnataka Chief Minister's car stopped and searched following code of conduct
× RELATED பொய்யானது பாஜகவின் வாரிசு அரசியல்...