×

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 ேபர் பலி ராஜாக்கமங்கலம் துறையில் சிறப்பு திருப்பலி

ஈத்தாமொழி, மே 26:  தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று ராஜாக்கமங்கலம் துறையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தூத்துக்குடி  துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், குமரி மாவட்டம்  ராஜாக்கமங்கலம்துறை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நேற்று சிறப்பு  திருப்பலி நடந்தது. பங்குதந்தை ராஜ் திருப்பலி நடத்தினார். பங்குபேரவை துணை  தலைவர் ஆல்பின்,  செயலாளர் மில்டன், துணை செயலாளர் சிலுவை தாசன், பொருளாளர் சேவியர், திமுக மாவட்ட  மீனவரணி துணை  அமைப்பாளர் ஜெயசீலன், சிலுவைராஜன், பிலிப் மற்றும் பங்குமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆலய கலையரங்கில், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் புகைப்படங்கள் அடங்கிய  பிளக்ஸ் போர்டு வைத்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதையொட்டி பங்குமக்கள் ஆலயத்தில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆலய வளாகம்  முழுவதும் கருப்பு கொடி கட்டப்பட்டு இருந்தது.  கடலில் மீன்பிடி தொழிலுக்கும் யாரும் செல்லவில்லை.  பெரியகாடு மக்களும் கடல் தொழிலை புறக்கணித்தனர். மேலும், துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து இன்று பெரியகாடு, ராஜாக்கமங்கலம் துறையை  சேர்ந்தவர்கள் மவுன ஊர்வலம் செல்கின்றனர்.  ராஜாக்கமங்கலம் துறையில் இருந்து புறப்படும் மவுன ஊர்வலம் பொழிக்கரை, பெரியகாடு வழியாக  ஈத்தாமொழி ஜங்சனில் நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குமக்கள் செய்துள்ளனர்.

Tags :
× RELATED கொல்லங்கோடு அருகே ஓட்டலில் தோசை கேட்டவர் மீது தாக்குதல்