×

சிந்தாதிரிப்பேட்டையில் பட்டப்பகலில் பயங்கரம் வாலிபரை ஓட ஓட வெட்டி கொல்ல முயற்சி: ரத்த வெள்ளத்தில் காவல் நிலையத்தில் தஞ்சம்

சென்னை: முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவரை 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட அரிவாளால் வெட்டினர். வெட்டு காயங்களுடன் வாலிபர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் சிந்தாதிரிப்பேட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை சிந்தாதிரிப்பேட்டை என்.என்.காலனியை சேர்ந்தவர் ஜேம்ஸ் (29). இவர் மீது அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஜேம்சுக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரதீப், சஞ்சய், விஜய்பாபு, வெங்கடேஷ், அப்பு ஆகியோருக்கும் இடையே முன் விரோதம் இருந்தது வந்தது. இதனால் ஜேம்சுக்கும் இவர்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை ஜேம்ஸ் வீட்டில் இருந்தார். அப்போது பிரதீப், சஞ்சய், விஜய்பாபு, வெங்கடேஷ், அப்பு ஆகியோர் பழி தீர்க்க அரிவாளுடன் ஜேம்ஸ் வீட்டிற்குள் நுழைந்து அவரை வெட்டினர். இதை சற்றும் எதிர்பார்க்காத ஜேம்ஸ் உயிருக்கு பயந்து வீட்டில் இருந்து தப்பி ஓடினார். ஆனால், 5 ேபரும் விடாமல் ஜேம்ஸை ஓட ஓட விரட்டி சென்று வெட்டினர். இதைபார்த்த பொதுமக்கள் நாலாபுறம் சிதறி ஓடினர். ஒரு கட்டத்தில் ஜேம்ஸை 5 பேரும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க ஜேம்ஸ் ரத்த வெள்ளத்தில் ஓடினர்.

குறிப்பிட்ட தூரம் சென்ற ஜேம்ஸ் அதற்கு மேல் ஓட முடியாமல் சிந்தாதிரிப்ேபட்டை காவல் நிலையத்தில் வெட்டு காயங்களுடன் தஞ்சமடைந்தார். இதைபார்த்த 5 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பியது. காவல்நிலையத்தில் இருந்து போலீசார் ரத்த வெள்ளத்தில் இருந்த ஜேம்ஸை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே, அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் ஜேம்சுக்கு தலை, வலது காது, வலது முழங்கால், கால் பாதம் உள்ளிட்ட உடல் முழுவதும் வெட்டு காயம் ஏற்பட்டது. தற்போது ஆபத்தான நிலையில் ஜேம்ஸ் சிகிச்சை ெபற்று வருகிறார். இதுகுறித்து ஜேம்ஸ் அளித்த புகாரின் படி சிந்தாதிரிப்ேபட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய பிரதீப், சஞ்சய், விஜய்பாபு, வெங்கடேஷ், அப்பு ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிந்தாதிரிப்ேபட்டையில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...