×

2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் கோர்ட் ஆணைக்கு கட்டுப்பட்டது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: 2ம் நிலை மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான இறுதி முடிவுகள் கோர்ட் ஆணைக்கு கட்டுப்பட்டது என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மனுதாரர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கவும், அதன் முடிவுகளை சீலிட்ட கவரில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. பிற விண்ணப்பதாரர்களின் நேர்முகத் தேர்வு முடிவுகளை ஏப்ரல் 11 வரை ஒத்தி வைக்கவும் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது. தேர்வில் வென்றும் நேர்முக தேர்வுக்கு அழைக்கவில்லை என சுமதி, துர்காசுதா, பிரவீன், பார்த்திபன் ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Tags : 2nd Level Motor Vehicle Inspector Jobs, Final Result, ICourt Branch
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...