பொள்ளாச்சி, மே 25: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நேற்று நடந்தது. பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில், நேற்று மார்ச்சநாயக்கன்பாளையம் உள்வட்டத்திற்கான ஜமாபந்தி நடைபெற்றது., மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிசந்திரன் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுகொண்டார்.
இதில், ஆத்துப்பொள்ளாச்சி, மார்ச்சநாயக்கன்பாளையம், ஒடையக்குளம், பெரியபோது ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். அதில் நந்தம்பட்ட கோரி 21பேரும், இலவச வீட்டுமனை பட்ட கோரி 13பேரும், முதியோர் உதவித்தொகை கோரி 15பேர், இதர கோரிக்கைகள் தொடர்பாக 28பேர் என மொத்தம் 79மனுக்கள் பெறப்பட்டதாக, வருவாய் அலுவலர்கள் தெரிவித்தனர்.