×

திருச்சியில் தடுப்பூசி போட்ட 8 குழந்தைகளுக்கு சளி தொல்லையால் மூச்சுத்திணறல்: மருத்துவர்கள் தகவல்

திருச்சி: திருச்சி திருவானை காவல் அருகே மாம்பழச்சாலை பகுதியில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான காப்பகம் செயல்பட்டு வருகிறது. அரசுக்கு சொந்தமான இந்த காப்பகமானது தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த காப்பகத்தில் 3 மாத குழந்தைகள் மற்றும் 6 மாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுவது வழக்கம். காப்பகத்தில் உள்ள 20 குழந்தைகள் உள்ளனர். தடுப்பூசி போடும்போது அதில் 8 குழந்தைகளுக்கு திடீரென  மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர்கள் தெரிவிக்கையில்; சில குழந்தைகளுக்கு சளி போன்ற தொல்லையால்தான் மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகவும் தடுப்பூசியினால் மூச்சுத்திணறல் ஏற்படவில்லை எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்த குழந்தைகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு 2 குழந்தைகள் உயிரிழந்தன. இந்நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும்பொழுது மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : Asphyxia due to colds in 8 vaccinated children in Trichy: Doctors inform
× RELATED காங். வேட்பாளர் சர்மா உருக்கம்: காந்தி...