திருச்சி: திருச்சியில் தடுப்பூசி போட்ட 8 குழந்தைகளுக்கு சளி தொல்லையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள 8 குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவானைக்காவலில் அரசு நீதியுடன் செயல்பட்டு வரும் குழந்தைகளுக்கான காப்பகத்தில் 20 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.