×

அம்ரித்பால் தலைமறைவான இடத்தில் இருந்து வீடியோ வெளியீடு: கடவுள் அருளால் தப்பித்து வருவதாக பேச்சு

சண்டிகர்: பஞ்சாபில் கடந்த 12 நாட்களாக போலீசாரால் தேடப்பட்டு வரும் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் தலைமறைவான இடத்தில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வாரிஸ் பஞ்சாப் தே என்ற அமைப்பின் தலைவரும், காலிஸ்தான் அமைப்பின் ஆதரவாளருமான அம்ரித்பால் சிங்கை பிடிக்க கடந்த 13 நாட்களாக பஞ்சாப் போலீசார் படாதப்பாடு பட்டு வருகின்றனர். 80,000 போலீசாரின் கண்களில் மண்ணை தூவி விட்டு மாறு வேடத்தில் ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்கு மாறி வருகிறார் அம்ரித்பால் சிங்.

அவர் நேபாளத்திற்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்ட நிலையில் பஞ்சாபின் போக்பூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர் தாம் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளார். தப்பிச்செல்ல வழியில்லை என்பதால் விரைவில் அம்ரித்பால் சிங் சரணடைய போவதாக பஞ்சாப் வட்டாரங்கள் கூறுகின்றனர். காவல் நிலையத்தை சூறையாடியது, அமித்ஷாவுக்கு மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகளில் அம்ரித்பால் சிங் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Amritbal ,God , Amritpal, in hiding, video, release
× RELATED தண்ணீர்… தண்ணீர்…