நன்றி குங்குமம் டாக்டர்
புதினா: வாய் துர்நாற்றத்தை நீக்கும், வாய் குமட்டுதலை குணமாக்கும். சாப்பிட்ட பிறகு புதினா இலைகள் அல்லது புதினா டீ அருந்தினால் அஜீரணக் கோளாறு மட்டுப்படும்.
இஞ்சி: தினசரி உணவுடன் இஞ்சி சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும். இஞ்சி டீ அருந்தலாம். இஞ்சியில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் அஜீரணத்தை கட்டுப்படுத்தும்.
பெருஞ்சீரகம்: சாப்பிட்டு முடித்தவுடன் பெருஞ்சீரகத்தை சிறிதளவு அப்படியே சாப்பிடலாம் அல்லது நீரில் போட்டு கொதிக்க வைத்து அருந்தலாம் அஜீரணத்தை சரி செய்யும்.
நெல்லிக்காய்: அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் அஜீரணக்கோளாறு நீங்கும். எலுமிச்சை: சாப்பிட்ட பிறகு எலுமிச்சை ஜூஸ் குடித்தால் வயிற்றெரிச்சல் மற்றும் வயிற்று வலி குறையும்.
தேன்: பாக்டீரியாக்கள் உற்பத்தியை தடுப்பதன் மூலம் அஜீரணத்தை குணப்படுத்த தேன் உதவுகிறது. தேனை அப்படியே சாப்பிடலாம் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட்டு வர அஜீரணத்தைக் கட்டுப்படுத்தலாம்.
லவங்கப்பட்டை: லவங்கப்பட்டையில் ஆன்டி ஆக்சிடன்ட் அதிகம் இருப்பதால் அஜீரணத்தைக் குணப்படுத்த உதவும். லவங்கப்பட்டையிலும் டீ செய்து ஒரு நாளைக்கு 2-3 முறை அருந்தலாம்.
தொகுப்பு: ரிஷி