×

ஜலதோஷத்திற்கு மருந்தாகும் பன்னீர் ரோஜா!

நன்றி குங்குமம் தோழி

*உடற்சூட்டை தணிக்கும்.

*ரோஜா மலர் மொட்டை துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதி அகலும்.

*பித்த நீர் அதிகமாகும் காரணத்தால் தோன்றும் மயக்கம், வாய் கசப்பு, நெஞ்செரிச்சல் போன்ற கோளாறுகளைத் தீர்க்க ரோஜாப் பூவைக் கஷாயம் செய்து பசுவின் பாலுடன் சேர்த்து தேவையான அளவு சர்க்கரை சேர்த்துப் பருகினால் குணம் தெரியும். ரோஜா பூவினால் தயார் செய்யப்பட்ட குல்கந்து மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கி வைத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் ரத்த பேதி, பித்தக் கோளாறுகள், வெள்ளைப்படுதல் முதலிய பிணிகள் விலகும்.

*ரோஜாப்பூ கஷாயத்துடன் காட்டு சீரகத்தை சேர்த்து அரைத்து மெல்லிய துணியால் நனைத்து முகரச் செய்தால் மூக்கடைப்பு, ஜலதோஷத்தினால் ஏற்படக்கூடிய பல்வேறு வகைக் கோளாறுகள் அகலும். சிலருக்கு வாய் நாற்றம் இருந்தால் வெற்றிலை பாக்குடன் ரோஜா இதழ்களைப் போட்டுக் கொள்வதனால் நாற்றம் நீங்கி நலம் பெறலாம்.

*ரோஜாப் பூக்களில் இருந்து ‘அத்தர்’ எனப்படும் நறுமணம் கொண்ட எண்ணெய் எடுக்கப்படுகிறது. தாகம், கீழ்வாய் எரிச்சல், வெள்ளைப்படுதல் ஆகியவற்றை குணப்படுத்தவும், மலமிளக்கவும் ரோஜாப் பூக்கள் பயன்படுகின்றன.

தொகுப்பு :  கவிதா சரவணன், ஸ்ரீரங்கம்.

Tags :
× RELATED கவுன்சலிங் ரூம்