தேனி: கம்பம் அருகே பாசன வாய்க்கால் கரையில் இருந்து மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது. மஞ்சகுளம் சின்ன வாய்க்கால் பகுதியில் இருந்த நாவல் மரங்களை மர்ம கும்பல் வெட்டி கடத்தியது. மரங்களை வெட்டி கடத்திய கும்பல் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.