சென்னை: பரந்தூரில் விமான நிலையத்திற்கு விரிவான அறிக்கை தயார் செய்யும் ஆலோசகரை முடிவு செய்யும் டெண்டர் அவகாசம் 2ம் முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 2ம் விமான நிலையத்திற்கு விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கை தயார் செய்ய ஆலோசகரை நியமிக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. பிப்ரவரி 6ம் தேதியுடன் அவகாசம் நிறைவடைந்த நிலையில் தற்போது பிப்ரவரி 27ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரத்தில் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி உள்ள ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு, எடையார்பாக்கம், தண்டலம் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4,500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.