மதுபான கொள்ைக வழக்கில் தெலங்கானா முதல்வர் மகளின் முன்னாள் ஆடிட்டர் கைது

புதுடெல்லி: தெலங்கானாவை சேர்ந்த ஆடிட்டர் புச்சி பாபு. இவர் முதல்வர் சந்திரசேகர்ராவின் மகள் கவிதாவிடம் பணிபுரிந்தவர். இவருக்கு டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணைக்கு புச்சிபாபு ஒத்துழைக்காததை அடுத்து நேற்று முன்தினம் மாலை சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து நேற்று அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த டிசம்பரில் முதல்வர் மகள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Related Stories: