சென்னை: தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனத்தின் பொது மேலாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சுங்கச்சவாடிகள் அமைக்கப்பட்டு சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவல் தவறானது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் வண்டலூரில் இருந்து மீஞ்சூர் வரையிலான வெளிவட்டசாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்கிற செய்தியும் தவறானது.