சென்னை: சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை மாநகராட்சியால் 387 கி.மீ. 471 பேருந்து சாலைகளும், 5270 கி.மீ 34,640 உட்புறச் சாலைகளும் பராமரிக்கப்படுகிறது. பேருந்து சாலைகளில் இரவு நேரங்களில் தூய்மைப்பணி நடக்கிறது. சாலையோரங்கள் மற்றும் மையத் தடுப்பு ஓரங்களில் மெல்லிய மணல் மற்றும் தூசிகள் படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறாகவும், மழைநீர் வடிகால்களில் சென்று அடைப்பையும் ஏற்படுத்துகின்றன.
எனவே, சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாத வகையில் இரவு நேரங்களில் 78 மெக்கானிக்கல் ஸ்வீப்பர் வாகனங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களைக் கொண்டு சாலைகளை சுத்தம் செய்யும் பணி மேற்காள்ளப்பட்டு வருகிறது.