திருப்பூர்: திருப்பூர் அருகே ஊத்துக்குளி சாலையில் உள்ள எஸ்.பெரியபாளையத்தில் போலி க்ளீனிக் ஒன்று நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து நேற்று மாலை நலப்பணிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அருண்பாபு மற்றும் மகேஷ்குமார் தலைமையில் அப்பகுதியில் செயல்பட்ட நல்லாண்டவர் கிளினிக்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அந்த க்ளினிக்கை ராஜா (44) என்பவர் நடத்தி வருவதும் மருந்தாளுநர் (B Pharm) படிப்பு மட்டும் படித்த நிலையில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததும், முறையாக மருத்துவம் படித்து பதிவு செய்த மருத்துவர்கள் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளித்து வந்துள்ளார்.