டெல்லி: மக்களவையில் பாரிவேந்தர் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்து வருகிறார். ஒன்றிய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரம்பலூர், துறையூர் வழியாக அரியலூர்-நாமக்கல் ரயில்வே பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. பெரம்பலுர் வழியாக ரயில்பாதை அமைப்பது 50 ஆண்டுகால கனவு என்றும் திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அரசு முன்வருமா என்று மக்களவையில் பாரிவேந்தர் எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.