திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், பெண்கள் கல்வி பாதியில் நிறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளது,என்றார்.