தூத்துக்குடி: விசை படகு உரிமையாளர்கள் தங்களிடம் வட்ட பணம் என்ற பெயரில் 10% அதிகமாக பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டி தூத்துக்குடி மீன்பிடி தொழிலாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மீன் பிடி தொழிலில் லாபம் மற்றும் நட்டத்தில் விசை படகு உரிமையாளர்களுக்கு 61%, தொழிலாளர்களுக்கு 31% என்ற விகிதத்தில் பங்கு தொகை பிரிக்கப்படுகிறது. ஆனால், அண்மை காலமாக வட்டப்பணம் என்ற பெயரில் கூடுதலாக 10 முதல் 15% தொகையை விசை படகு உரிமையாளர்கள் வசூலிக்கின்றனர் என்பது மீன்பிடி தொழிலாளர்களின் குற்றச்சாட்டாகும்.