திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.1.38 லட்சம் ரொக்கம், 3 கிலோ தங்கம், 4 கிலோ 130 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சக்தி தளங்களில் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயில். இங்கு பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்ச கணக்கான பக்தர்கள் வருகை தந்து வழிபாடு செய்து விட்டு உண்டியல்களில் காணிக்கை செலுத்துகின்றனர். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. நிரந்த உண்டியல்களோடு, தைப்பூசத்திற்காக அமைக்கப்பட்ட தற்காலிக உண்டியல் எண்ணப்பட்டது.