பெரம்பூர்: கொடுங்கையூர் வெங்கடேஸ்வரா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் யாஸ்மின் (27), குடும்பத்துடன் வசித்து வருகிறார். இன்னும் திருமணம் ஆகவில்லை. பிகாம் வரை படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவர் மற்றும் தாய் சுமார் ரூ.17 லட்சம் வரை கடன் வாங்கி இருந்ததாகவும், அதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் யாஸ்மின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டின் கதவை உள்பக்கமாக தாழிட்டு ஹாலில் உள்ள கொக்கியில் துப்பட்டாவால் தூக்கு போட்டுக்கொண்டார்.