ஆலந்தூர்: ஆலந்தூர் கண்ணன் காலனியை சேர்ந்தவர் விஜயன் (32). இவர், புதுப்பேட்டை ஆயுதப்படையில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காவலர் விஜயன், தனது மைத்துனர் வாசுவுடன் பழவந்தாங்கல் மார்க்கெட்டில் காய்கறி வாங்க சென்றார். அப்போது, அஜ்மல் என்பவர் வாசுவுக்கு போன் செய்து, தன்னை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். உடனே வாருங்கள் என அழைத்துள்ளார். இதையடுத்து, காவலர் விஜயன், வாசு ஆகியோர் அஜ்மல் போன் செய்த இடத்திற்கு சென்று, அவரை அடித்தவர்களை தட்டிக்கேட்டுள்ளனர்.